1.11 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கூடுதல் அரிசி - தமிழக அரசு அறிவிப்பு

மத்திய அரசு அறிவித்துள்ள கூடுதல் அரிசி, தமிழகத்தில் 1 கோடியே 11 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
1.11 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கூடுதல் அரிசி - தமிழக அரசு அறிவிப்பு
x
மத்திய அரசு அறிவித்துள்ள கூடுதல் அரிசி, தமிழகத்தில் 1 கோடியே 11 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னுரிமை மற்றும் அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு, மாநிலத்தில் அளிக்கப்படும் அரிசியுடன், குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு கூடுதலாக தலா 5 கிலோ அரிசியை விலையில்லாமல் அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் 1 கோடியே 11 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் அரிசி அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில், மே மாதம் வழங்க வேண்டிய கூடுதல் அரிசி, ஜூலையில் சேர்த்து அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்