"அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள்" - தமிழக அரசு எச்சரிக்கை

கொரோனா பேரிடர் காலத்தை தவறாக பயன்படுத்தும் தனியார் மருத்துவமனைகள் மீது, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
x
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் உயிரை துச்சமென மதித்து, அரும்பணியாற்றி வரும் மருத்துவப் பணியாளர்களின் தோளோடு தோள் நின்று தமிழக அரசு உறுதுணையாக இருந்து வருவதாக கூறியுள்ளார்.
இத்தகைய சூழலில், சில நோயாளிகள் உயிரிழக்க நேரிடும் போது, அவர்களின் உறவினர்கள், மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களை தாக்கும் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், இச்செயல்களில் ஈடுபடுபவர்கள்மீது காவல் துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.மேலும், ஒரு சில மருத்துவமனைகள் பேரிடர் சூழலைத் தவறாகப் பயன்படுத்தி, நோயாளிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக செய்திகள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர், இதுபோல, லாபம் அடைய நினைக்கும் மருத்துவமனைகள் மீதும், மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு தயங்காது என்றும், தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின்படி, இந்த மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, சம்பந்தப் பட்டவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்