"தி பேமிலி மேன் 2" தொடர் விவகாரம்; தொடரை மத்திய அரசு நிறுத்த வேண்டும் - பாரதிராஜா வலியுறுத்தல்

தமிழ் இனத்திற்கு எதிரான, "தி பேமிலி மேன் 2" இணையத் தொடரை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
தி பேமிலி மேன் 2 தொடர் விவகாரம்; தொடரை மத்திய அரசு நிறுத்த வேண்டும் - பாரதிராஜா வலியுறுத்தல்
x
தமிழ் இனத்திற்கு எதிரான, "தி பேமிலி மேன் 2" 
இணையத் தொடரை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தொடர்பாக, தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்டோர் கோரிக்கைவைத்த பிறகும் ஒன்றிய அரசு அந்த தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது மனவேதனைஅளிப்பதாக கூறியுள்ளார்.
தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக்களத்தை அறியாத தகுதியற்ற நபர்களால்,
இத்தொடர் எடுக்கப்பட்டிருப்பதாக,
கூறியுள்ளார்.
அறம், வீரம், செறிந்த போராட்டவரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் உருவாக்கி இருக்கும் தொடரை 
வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளார்.
இத் தொடரை உடனே நிறுத்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிடவேண்டும்  பாரதிராஜா வலியுறுத்தியுள்ளார்.
தி பேமிலி மேன் 2 தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்தவில் என்றால்,அந்த நிறுவனத்தின் அனைத்து வர்த்தகத்தையும் தமிழர்கள் புறக்கணிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்