கோயில் பத்திரங்கள் புதுப்பிக்கும் பணி - அமைச்சர் சேகர் பாபு தொடக்கி வைப்பு

அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களின் பத்திரங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்படும் என, அமைச்சர் சேகர் பாபு உறுதியளித்தார்.
x
அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களின் பத்திரங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்படும் என, அமைச்சர் சேகர் பாபு உறுதியளித்தார். தமிழகத்தில் அழியும் நிலையில் உள்ள கோயில் பத்திரங்களை புதுப்பிக்கும் பணியை சென்னையில் அமைச்சர் சேகர் பாபு தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் இங்கும் கோயில்களில், அழியும் நிலையில் உள்ள பத்திரங்கள் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்படும் என்றார். பத்திரங்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி ஆறு மாதங்களில் நிறைவடையும் எனவும், அதன்பிறகு இணையதளத்தில் பொதுமக்கள் பார்வையிடலாம் எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்