10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் பணி - முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை கொளத்தூரில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் பணியை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
x
சென்னை கொளத்தூரில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் பணியை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். திரு.வி.க.நகரில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய முதல்வர் ஸ்டாலின், ஜி.கே.எம். காலனியில் திமுகவைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் 250 பேருக்கு சிறப்பு செய்தார். இதைத் தொடர்ந்து, கொளத்தூரில் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில், 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்யும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர், தடுப்பூசி போட்டுக் கொண்ட இளைஞர்களுக்கு பரிசு வழங்கி, பாராட்டு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்