ஆம்போடெரிசின்-பி குப்பிகள் கூடுதலாக ஒதுக்கீடு - மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தகவல்

கறுப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின் - பி மருந்தை, கூடுதலாக 680 குப்பிகள் தமிழகத்திற்கு ஒதுக்கி இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆம்போடெரிசின்-பி குப்பிகள் கூடுதலாக ஒதுக்கீடு - மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தகவல்
x
ஆம்போடெரிசின் - பி மருந்தை அந்தந்த மாநிலங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில், மத்திய அரசு ஒதுக்கி வருகிறது. அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக 30 ஆயிரத்து 100 ஆம்போடெரிசின் - பி குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். இதில் தமிழகத்திற்கு கூடுதலாக 680 ஆம்போடெரிசின் - பி குப்பிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 5ஆயிரத்து 900 மற்றும் குஜராத் மாநிலத்திற்கு 5 ஆயிரத்து 630 குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு முன், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 80 ஆயிரம் ஆம்போடெரிசின் - பி மருந்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்