"பயிற்சியின் போது பாலியல் தொந்தரவு" - தற்காப்புக்கலை பயிற்சியாளர் மீது புகார்

சென்னையில் பாலியல் புகாரில் கராத்தே பயிற்சியாளர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயிற்சியின் போது பாலியல் தொந்தரவு - தற்காப்புக்கலை பயிற்சியாளர் மீது புகார்
x
சென்னையில் பாலியல் புகாரில் கராத்தே பயிற்சியாளர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணா நகரில் தற்காப்பு கலை பயிற்சி நடத்தி வருபவர் கெபிராஜ். இவர் கெருகம்பாக்கத்தில் உள்ள பத்மா சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் பகுதிநேர கராத்தே பயிற்சியாளராக கடந்த சில ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். மேலும் இவர் வேறு சில பள்ளிகளிலும் பகுதிநேர ஆசிரியராக தற்காப்பு கலை பயிற்சி கொடுத்து வந்தார். இவரிடம்  சில ஆண்டுகளுக்கு முன்பாக தற்காப்பு கலை பயிற்சி பெற வந்த முன்னாள் மாணவி ஒருவரிடம் பாலியல் தொந்தரவு ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் போட்டிகளுக்காக அழைத்துச் செல்லும் போது மாணவிகளிடம் கெபிராஜ் அத்துமீறியதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக முன்னாள் மாணவி அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் கெபிராஜ் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் ஜூடோ கலை பயிற்சியாளர் உட்பட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்