ஆன்லைன் மூலம் அத்தியாவசிய பொருட்கள் - விற்பனையாளர்களின் தகவல்கள் வெளியீடு

சென்னையில் தொலைபேசி மற்றும் ஆன்லைன் ஆர்டர் மூலம் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்குவோரின் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் அத்தியாவசிய பொருட்கள் - விற்பனையாளர்களின் தகவல்கள் வெளியீடு
x
சென்னையில் தொலைபேசி மற்றும் ஆன்லைன் ஆர்டர் மூலம் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்குவோரின் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வணிகர் சங்கங்களுடன் இணைந்து நடமாடும் வாகனங்கள், ஆன்லைன் மற்றும் தொலைபேசி ஆர்டர்களின் மூலம் விற்பனை செய்ய சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியில் சுமார் 2 ஆயிரத்து 197 பேருக்கு அனுமதி வழங்கியுள்ளதாக கூறியுள்ளது.  ஆன்லைன் மற்றும் தொலைபேசி ஆர்டர்களை வீடுகளுக்கே கொண்டுசெல்லும் விற்பனையாளர்கள் குறித்த தகவல்களை இணைதளத்தில் வெளியிட்டுள்ளது.  அதில், அங்காடியின் பெயர், தொலைபேசி எண், வார்டு மற்றும் அந்த பகுதியில் உள்ள சிறிய கடை அல்லது சூப்பர் மார்க்கெட் என வகைப்படுத்தி மாநகராட்சி வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்