கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டால் பரிசு-இருசக்கர வாகனம், தங்க நாணயம் அளிப்பு

சென்னை அடுத்த கோவளத்தை கொரோனா பாதிப்பு இல்லாத ஊராக மாற்ற பொதுமக்கள் தடுப்பூசி போட்டு கொண்டால் பரிசுகள் வழங்கப்படும் என்று தொண்டு நிறுவன இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
x
சென்னை அடுத்த கோவளத்தை கொரோனா பாதிப்பு இல்லாத ஊராக மாற்ற பொதுமக்கள் தடுப்பூசி போட்டு கொண்டால்  பரிசுகள் வழங்கப்படும் என்று தொண்டு நிறுவன இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தடுப்பூசி போட்டு கொள்ளும் நபர்களில் 10 பேருக்கு குலுக்கல் முறையில் இருசக்கர வாகனம், குளிர்சாதனபெட்டி, வாஷிங்மிஷின், தங்க நாணையம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. தடுப்பூசி செலுத்தியவுடன்  பிரியாணி பொட்டலம், ஆண்களுக்கு செல்போன் ரீசார்ஜ், பெண்களுக்கு புடவை  என உடனடியாக 
தனியார் தொண்டு நிறுவனத்தினர்  பரிசுகள் வழங்கி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டு கொள்வதாக ஆரம்ப சுகார நிலைய மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 


Next Story

மேலும் செய்திகள்