கி.ரா.வுக்கு கோவில்பட்டியில் சிலை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மறைந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கி.ரா.வுக்கு கோவில்பட்டியில் சிலை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
மறைந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், எழுத்துலகில் கி.ரா என்று அன்போடு அழைக்கப்படும் கி.ராஜநாரயணனின் மறைவு, கரிசல் மண்ணின் கதைகளுக்கு ஓர் முற்றுப்புள்ளி என, குறிப்பிட்டுள்ளார். அவர் மறையவில்லை, எழுத்துக்களாய் உயிர் வாழ்கிறார் என புகழாரம் சூட்டிய ஸ்டாலின், தமிழ் இலக்கியத்தின் பேராளுமையாய் வாழ்ந்த கி. ராஜநாராயணின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என, அறிவித்துள்ளார். மேலும் கி.ராஜாநாராயணனுக்கு கோவில்பட்டியில் சிலை அமைக்கப்படும் எனவும், அவர் படித்த பள்ளி பழமை மாறாமல் சீரமைக்கப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்