கீழமை நீதிமன்றங்களின் பணிகளை மறு உத்தரவு வரும் வரை நிறுத்துங்கள் - உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனபால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களில், கைதிகளை சிறையில் அடைப்பதற்கான ரிமாண்ட் உத்தரவை தவிர்த்து பிற பணிகளை மறு உத்தரவு வரு​ம் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
கீழமை நீதிமன்ற வளாகங்களில், சம்பந்தப்பட்ட நீதிபதியின் அனுமதியின்றி, வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள்  நுழைய தடை விதிக்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி நீதிபதிகள், நீதித்துறை ஊழியர்கள் நீதிமன்ற கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம் எனவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்