சிறார்களிடையே அதிகரிக்கும் கொரோனா - ஒரே நாளில் 1264 குழந்தைகளுக்கு தொற்று

தமிழகத்தில் தினசரி பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 10 நாட்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறார்களிடையே அதிகரிக்கும் கொரோனா - ஒரே நாளில் 1264 குழந்தைகளுக்கு தொற்று
x
கடந்த 10 நாட்களாக பிறந்த பச்சிளம் குழந்தைகள் முதல் 12 வயதிற்குட்பட்ட சிறார்கள், இடையே கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் ஆயிரத்து 264 பேர் கொரனோ தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 10 நாட்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் பச்சிளம் குழந்தைகள் உட்பட 12 வயதிற்குட்பட்ட 10 ஆயிரத்து 669 சிறார்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயின் தீவிரம் அதிகரித்து வரும் சூழலில் சிறார்கள் மீதான பாதிப்பு பெற்றோர் மத்தியில் மிக பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கண்டறியப்படும் நோய் தொற்றுகளில் 40 சதவீதம் வரையிலான நோய்த் தொற்றுக்கள் குடும்ப  CLUSTER  மூலமாகவே கண்டறியபடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்