டவ் தே புயல்-முன்னெச்சரிக்கை நடவடிக்கை - பழங்குடியின மக்கள் முகாம்களில் தங்கவைப்பு
டவ் தே புயல் காரணமாக கேரள மாநில எல்லை பகுதியில் உள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
டவ் தே புயல் காரணமாக கேரள மாநில எல்லை பகுதியில் உள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது,. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் உள்ள 180 க்கும் மேற்பட்ட பழங்குடியினர் சமூக இடைவெளியுடன் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்,. இந்த நிலையில் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பழங்குடியினர் தங்கியுள்ள 6 முகாம்களை ஆய்வு செய்தார்,. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதிய அளவில் ஆக்சிஜன் மற்றும் செம்டெசிவிர் மருந்து நீலகிரிக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்துள்ளதாக தெரிவித்தார்.
Next Story