"ஸ்டெர்லைட் ஆலையில் பழுது நீக்கம்;ஆக்சிஜன் உற்பத்தி விரைவில் தொடங்கும்" - தி.மு.க. எம்.பி. கனிமொழி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  வரும் புதன் கிழமை முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறினார். முன்னதாக கனிமொழியும், அமைச்சர் கீதா ஜீவனும் கோவில்பட்டி அருகே முடுக்கலான்குளத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த அழகுமுருகராஜ் என்பவரின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.  
அழகுமுருகராஜின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்