செல்போன் திருடியதாக சிறுவன் மீது தாக்குதல் - சிறுவனை தாக்கிய 3 பேர் கைது
குடியாத்தம் அருகேயுள்ள ராமாபுரம் பகுதியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவன், அதே பகுதியை சேர்ந்த ஒருவர் வீட்டில் இருந்து செல்போனை எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது,.
குடியாத்தம் அருகேயுள்ள ராமாபுரம் பகுதியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவன், அதே பகுதியை சேர்ந்த ஒருவர் வீட்டில் இருந்து செல்போனை எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது,. இதனை அறிந்த அதே கிராமத்தை சேர்ந்த கோபிநாத், உமாநாத் மற்றும் குணா ஆகியோர் சிறுவனை ஒதுக்குப்புறமாக அழைத்துச்சென்று ஆடைகளை முழுவதுமாக கழற்றிவிட்டு கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்,. அதனை பார்த்த ஒருவர் குடியாத்தம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்,. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை மீட்ட போலீசார், உமாநாத்,கோபிநாத் மற்றும் குணா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story