ஸ்ரீரங்கம் ஜீயர் நியமன விவகாரம் அறிவிப்பு ரத்து - கோயில் இணை ஆணையர் அறிவிப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவில் ஜீயர் நியமனம் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக கோயில் இணை ஆணையர் மாரிமுத்து அறிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் ஜீயர் நியமன விவகாரம் அறிவிப்பு ரத்து - கோயில் இணை ஆணையர் அறிவிப்பு
x
ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவில் ஜீயர் நியமனம் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக கோயில் இணை ஆணையர் மாரிமுத்து அறிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் 51-வது ஜீயர் நியமனம் தொடர்பாக கோயில் வலைதளத்தில் அறிவிப்பு ஒன்றை கோயில் நிர்வாகம் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் 51வது ஜீயர் பட்டத்திற்காக காலியாக உள்ள பதவிக்கு நியமனம் செய்ய து தகுதி உடையவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கோயில் நிர்வாகம் மூலம் தான் ஜீயர் நியமனம் செய்யப்படுவது வழக்கம் நடைமுறையில் உள்ள நிலையில்  இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்,. இந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக தற்பொழுது அந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து அறிவித்துள்ளார்,. இதனைத்தொடர்ந்து ஜீயர் நியமன விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்