வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு குறையும்; குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்- அமைச்சர் சேகர் பாபு நம்பிக்கை

வரும் நாட்களில் கொரோனா பாதிப்பை விட, குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
x
வரும் நாட்களில் கொரோனா பாதிப்பை விட, குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
பெரம்பூர் பெரியார் நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனையில் புதிய கொரோனா அவசர சிகிச்சை மையத்தை, அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, கொரோனா நோயாளிகளுக்கு முழுமையாக சிகிச்சை அளித்த பிறகே, அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்