தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு
16-வது தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
16-வது தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை சபாநாயகராக பிச்சாண்டி போட்டியின்றி தேர்வாகி உள்ளார். இரு பதவிகளுக்கும் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மீண்டும் சட்டப்பேரவை கூடிய பிறகு சபாநாயகராக அப்பாவும், துணை சபாநாயகராக பிச்சாண்டியும் பதவி ஏற்க உள்ளனர்.
Next Story