சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் - அதிமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் - அதிமுக  அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
சென்னை ராயப்பேட்டையில் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, அதிமுக தலைமை இந்த அறிவிப்பை வெளியிட்டது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஒரு மனதாக எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான கடிதம் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், கே.பி.அன்பழகன் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் தலைமைச்செயலகத்தில் பேரவை செயலாளரை நேரில் சந்தித்து கடிதத்தை சமர்ப்பித்தனர். தேர்தலில் 65 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க., சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுகிறது.

Next Story

மேலும் செய்திகள்