தமிழகத்தில் போலியான ரெம்டெசிவர் மருந்து விற்பனை - ஒருவர் கைது
தமிழகத்தில் போலியான ரெம்டெசிவர் மருந்தை விற்பனை செய்த பெங்களூருவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்
தமிழகத்தில் போலியான ரெம்டெசிவர் மருந்தை விற்பனை செய்த பெங்களூருவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்
வாட்ஸ்அப் மூலம் ரெம்டெசிவர் மருந்து கள்ளச் சந்தையில் விற்கப்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க கிருஷ்ணகிரி மாவட்ட சிவில் சப்ளை போலீசார்
களத்தில் இறங்கினர்,. வாட்ஸ் அப்பில் கிடைத்தை செல்பேசி எண்ணை தொடர்பு கொண்ட போலீசார், தங்களுக்கு ரெம்டெசிவர் மருத்துக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர்,. இதனைத்தொடர்ந்து கார் மூலம் ஓசூர் வந்த பெங்களூருவை சேர்ந்த ஆனந்த பாலாஜி என்பவர் போலியான ரெம்டெசிவர் மருந்தை 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றுள்ளார்,. அப்போது ஆனந்த பாலாஜியை போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்,. விசாரணையில் சென்னை மதுரவாயலை சேர்ந்த மருத்துவர் ஒருவரும் இதன் பின்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது
Next Story