தமிழகத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் உள்ளதா? -நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் எத்தனை ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது
x
திருச்சி பெல் நிறுவனத்தில் மீண்டும் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணியை தொடங்க உத்தரவிடக் கோரிய மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழகத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் உள்ளதா என்றும், தமிழகத்தில் தற்போது எத்தனை ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன எனவும் மத்திய மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்,.செங்கல்பட்டில் நோய் தடுப்பு மருந்துகள் தயாரிக்க  உருவாக்கப்பட்டுள்ள நிறுவனத்தை மத்திய அரசு ஏன் பயன்பாட்டுக்கு கொண்டு வர வில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்,.


Next Story

மேலும் செய்திகள்