"7ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்" - அதிமுக தலைமை அறிவிப்பு

வரும் 7ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
x
வரும் 7ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. மாலை 4.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது என பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை தேர்ந்தெடுப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்