கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் - மேலும் 2 பேரை கைது செய்த போலீசார்

சென்னையில் ரெம்டெசிவிர் கொரோனா மருந்தை கள்ளச் சந்தையில் விற்ற தனியார் மருத்துவமனை ஊழியர் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
x
சென்னையில் ரெம்டெசிவிர் கொரோனா மருந்தை கள்ளச் சந்தையில் விற்ற தனியார் மருத்துவமனை ஊழியர் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே தனியார் மருத்துவர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ள நிலையில், ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றதாக சென்னை மிண்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஊழியர் கார்த்திக்-கை ஐ.சி.எஃப் போலீசார் கைது செய்தனர். இதேபோல், சென்னை புரசைவாக்கத்தில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்ற தனியார் மருத்துவமனையின் ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்