தமிழக ஆளுநருடன் உயர் அதிகாரிகள் சந்திப்பு - கொரோனா பரவல் குறித்து முக்கிய ஆலோசனை

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
தமிழக ஆளுநருடன் உயர் அதிகாரிகள் சந்திப்பு - கொரோனா பரவல் குறித்து முக்கிய ஆலோசனை
x
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், டிஜிபி திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற ஆலோசனையில், தமிழகத்தில் கொரோனா பரவல் நிலை, அதனை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் செயல்பாட்டில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து ஆளுநரிடம், தலைமை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இனிவரும் நாட்களில் கொரோனா பரவல் உச்சம் அடைந்தால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் ஆலோசித்ததாக தெரிகிறது. வரும் மே 1 மற்றும் 2ம் தேதிகளில், தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் அரசுக்கு பரிந்துரைத்துள்ள நிலையில், அது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்