இந்தியன்-2 பட விவகாரம் - ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையிலான சமரச பேச்சு தோல்வி

இந்தியன்-2 திரைப்பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையிலான சமரச பேச்சு தோல்வி அடைந்தது.
இந்தியன்-2 பட விவகாரம் - ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையிலான சமரச பேச்சு தோல்வி
x
இந்தியன்-2 திரைப்பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையிலான சமரச பேச்சு தோல்வி அடைந்தது. 

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்தை முடித்துக் கொடுக்காமல்  பிற படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது,  இரு தரப்பினரும் கலந்து பேசி தீர்வு காண நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்நிலையில், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று, 
இயக்குனர் ஷங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த சனிக்கிழமை இரண்டரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், 

ஜூன் முதல் அக்டோபர் மாதத்துக்குள் படத்தை முடித்துக் கொடுத்து விடுவதாக ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப் பட்டதாகவும், அதை தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஏற்காததால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், இயக்குனர் ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்