பெல் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

திருச்சி பெல் ஆலையில், ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார்.
பெல் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்
x
திருச்சி பெல் ஆலையில், ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,திருச்சி பாரத் மிகுமின் நிறுவனத்தில் மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்ஸிஜன் உற்பத்தி தொழிற்கூடத்தில் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளாதால், 2016 முதல் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். பெல் நிறுவனம், 8 மணி நேரத்தில், 1000 கியூபிக் மீட்டர், அதாவது 150 உருளைகள் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது எனவும் வைகோ தெரிவித்துள்ளார். 2016 வரை, திருச்சி பெல் மருத்துவமனையில், இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் பயன்படுத்தப்பட்டு வந்தது என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்