மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
x
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை முதல் வருகிற 1-ஆம் தேதி வரை, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டு உள்ளது.

சென்னையைப் பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,,.... 

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில், பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

மேலும், காற்றின் வெப்பநிலை அதிகமாக உணரப்படுமென்றும், இதனால், இயல்புக்கு மாறாக அதிகம் வியர்க்கும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்