ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடிவுநியாயம் தானா? ரா.சரத்குமார் கேள்வி

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்ய சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடிவுநியாயம் தானா? ரா.சரத்குமார் கேள்வி
x
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்ய சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது.

 இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அவசரக் காலத்தில் தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து, வட இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்கு ஆகும் செலவையும், நேரத்தையும்   தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக வட இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் உடனடியாக ஆக்சிஜன் தயாரிக்கும் சிறு சிறு யூனிட்டுகளையும், சேமிப்பு கலன்களையும் அமைத்தால், அங்கே நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கிடும் நிரந்தரத் தீர்வாகவும் அமையும் என யோசனை தெரிவித்துள்ளார் . தமிழகத்தில், தற்போது ஸ்டெர்லைட் ஆலையை திறந்து தான் ஆக்சிஜன் தயாரிக்க வேண்டும் என்ற சூழல் இல்லாத காரணத்தால், அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்