"கொரோனாவுக்கு மீண்டும் சித்த மருத்துவ சிகிச்சை" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா பரிசோதனை மையம் மற்றும் தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
x
சென்னை தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா பரிசோதனை மையம் மற்றும் தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகளால் கொரோனா பரவும் வேகம் குறைந்துள்ளதாக தெரிவித்தார். கொரோனா பாதிப்பில் சித்த மருத்துவம் கைகொடுத்திருப்பதாகவும், மீண்டும் முழு வீச்சில் சித்த மருத்துவ சிகிச்சை தொடங்கப்படும் என்றும் கூறினார். மேலும், வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா நோயாளிகள் தொடர்ந்து மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்