சிறைக் கைதி உயிரிழந்த விவகாரம் - சிறையில் மாஜிஸ்திரேட் நேரில் ஆய்வு

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணைக் கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் நேரடியாக ஆய்வு செய்து சாட்சிகளை விசாரித்தார்.
சிறைக் கைதி உயிரிழந்த விவகாரம் - சிறையில் மாஜிஸ்திரேட் நேரில் ஆய்வு
x
நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைச் சாலையில், கடந்த 22-ஆம் தேதி சிறைவாசிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் முத்துமனோ என்ற கைதி அடித்துக் கொலை செய்யப்பட்டார். மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டது. அதில், உடன்பாடு எட்டாத நிலையில், உயிரிழந்த முத்து மனோவின் சொந்த ஊரான வாகை குளத்தில் ஊர் மக்கள், உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் தொடர் போராட்டத்தில், 4-வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்த முத்துமானோவின் தந்தை மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 5 பேரிடம் நெல்லை வண்ணாரபேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் வைத்து விசாரிக்கப்பட்டது. உயிரிழந்த முத்துமனோவின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்  அறிக்கை, தகவல் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக போரோட்டம் தொடர்ந்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்