தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 252 கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால், சனி கிழமையான நேற்று ஒரே நாளில் 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது.
x
தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால், சனி கிழமையான நேற்று ஒரே நாளில் 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது. 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் நடைபெற்ற மது விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது...

அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 252 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.
அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 58 கோடியே 37 லட்சம் ரூபாய்க்கும்...
மதுரை மண்டலத்தில் 49 கோடியே 43 லட்சம் ரூபாய்க்கு, இதற்கு அடுத்தபடியாக திருச்சி மண்டலத்தில் 48 புள்ளி 57 கோடிக்கும் மது பானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன
இதேபோல் கோவை மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று 48 கோடியே 32 லட்சம் ரூபாய்க்கும்,
சேலம் மண்டலத்தில் 47 கோடியே 79 லட்சம் ரூபாய்க்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்