சாலைகளில் நடைபெற்ற திருமணங்கள்... சமூக இடைவெளி இன்றி கூடிய உறவினர்கள்

சாலைகளில் நடைபெற்ற திருமணங்கள்... சமூக இடைவெளி இன்றி கூடிய உறவினர்கள்
x
சாலைகளில் நடைபெற்ற திருமணங்கள்... சமூக இடைவெளி இன்றி கூடிய உறவினர்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக கடலூரில், கோவில் முன் உள்ள சாலைகளில் திருமணங்கள் நடைபெற்றன.கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் முகூர்த்த நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவில்களில் திருமணங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட திருமணங்களை பலர் ரத்து செய்து விட்ட நிலையில், சில திருமணங்கள் கோவிலை சுற்றியுள்ள சாலைகளில் வைத்து நடைபெற்றன. புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க சாலையிலேயே மாப்பிள்ளை மணமகளுக்கு தாலி கட்டினார். திருமணத்திற்கு வந்தவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்த‌தால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்