பாம்பன் பகுதியில் அதிக மீன் வரத்து; வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை - மீனவர்கள் வேதனை

ராமேஸ்வரம் பகுதியில் மீன் வரத்து அதிகம் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வராததால் போதிய விலை கிடைக்கவில்லை என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பாம்பன் பகுதியில் அதிக மீன் வரத்து; வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை - மீனவர்கள் வேதனை
x
ராமேஸ்வரம் பகுதியில்  மீன் வரத்து அதிகம் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வராததால் போதிய விலை கிடைக்கவில்லை என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மீன் இனப்பெருக்க காலம் என்பதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல அரசு தடை விதித்துள்ள நிலையில்  நாட்டுப்படகு மீனவர்கள் தினமும் பாம்பன்  கரை பகுதியில் கிடைக்கும் மீன்களை பிடித்து வருவதால் மீன் வரத்து அதிகம் உள்ளது. அவற்றை உள்ளூர் வியாபாரிகள் வாங்கி சென்றாலும் , கேரளா , கர்நாடகா போன்ற அண்டை  மாநிலங்களில் இருந்து வியாபரிகள் வராததால் மீன்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என மீனவர்கள் வேதனை தெரிவித்துனர்.

Next Story

மேலும் செய்திகள்