"கட்சியில் தலைவர்களை தேடிக் கொண்டிருக்கிறேன்" - கமல்ஹாசன்

100 நாள் வேலை திட்டத்தில் வேலைவாய்ப்பு மூலம் மக்களிடம் பணத்தை கொடுத்து, அதை செலவு செய்ய டாஸ்மாக் அமைத்திருக்கிறார்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கட்சியில் தலைவர்களை தேடிக் கொண்டிருக்கிறேன் - கமல்ஹாசன்
x
100 நாள் வேலை திட்டத்தில் வேலைவாய்ப்பு மூலம் மக்களிடம் பணத்தை கொடுத்து, அதை செலவு செய்ய டாஸ்மாக் அமைத்திருக்கிறார்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

"உள்ளாட்சியில் தன்னாட்சி" என்ற இணைய வழி கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய கமல்ஹாசன், விமர்சனங்களுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராக இருப்பதாக கூறினார். கட்சியில் தலைவர்களை தேடி கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். ஜனநாயகம் என்பது ஒருமுறை நிறுவிட்டால் அப்படியே இருக்கப்போகும் விஷயம் அல்ல, நாம் அவ்வப்போது கவனிக்க வேண்டும் என கமல்ஹாசன் கூறினார். தகுதியுள்ள குடிமகனாக இருந்தால் நிச்சயமாக நல்லாட்சி அமையும் எனவும், ஆட்சி என்பது கோட்டைக்குள் இருந்து மட்டும் செய்யும் விஷயமல்ல எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்