திருச்சி மாநகர் பகுதியில் கொரோனா அதிகரிப்பு... பல்வேறு தெருக்களுக்கு சீல் வைப்பு

திருச்சி மாநகர் பகுதியில் கொரோனா அதிகரிப்பு... பல்வேறு தெருக்களுக்கு சீல் வைப்பு
திருச்சி மாநகர் பகுதியில் கொரோனா அதிகரிப்பு... பல்வேறு தெருக்களுக்கு சீல் வைப்பு
x
திருச்சி மாநகர் பகுதியில் கொரோனா அதிகரிப்பு... பல்வேறு தெருக்களுக்கு சீல் வைப்பு

திருச்சி மாவட்டம் உறையூரில் உள்ள நாச்சியார் பாளையம், தில்லைநகர் உள்ளிட்ட பகுதிகள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. திருச்சி மாநகர் பகுதில் உள்ள உறையூர் நாச்சியார் பாளையம், சின்ன சௌராஷ்டிரா தெரு உள்ளிட்ட பகுதிகள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, மாநகராட்சியால் தகரம் கொண்டு அடைக்கப்பட்டது. இந்நிலையில் ராம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஏழு பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தகரம் கொண்டு அடைக்கப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்