ஒருங்கிணைப்பு குழு; ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் - அரசாணை வெளியீடு

வெளி மாநில தொழிலாளர்கள், சிறு, குறு தொழிலாளர்களை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகளாக நஜிமுதீன் மற்றும் செல்வி அபூர்வா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒருங்கிணைப்பு குழு; ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்  - அரசாணை வெளியீடு
x
வெளி மாநில  தொழிலாளர்கள், சிறு, குறு தொழிலாளர்களை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகளாக நஜிமுதீன் மற்றும்  செல்வி அபூர்வா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎஸ் அதிகாரியாக விசுவநாதன் மற்றும் மைதிலி ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு உதவி புரிய ஐஏஎஸ் அதிகாரிகள் ஜெயஸ்ரீ ரகுநந்தன், விஜயராஜ் குமார் மற்றும் மதுமதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பத்திரிகை மற்றும் செய்தி தொலைக்காட்சிகளை ஒருங்கிணைக்க ஐஏஎஸ் அதிகாரிகளாக குமரகுருபரன், பாஸ்கர பாண்டியன் மற்றும் தீபக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்