முதல்வர் பழனிச்சாமிக்கு அறுவை சிகிச்சை - தனியார் மருத்துவமனையில் அனுமதி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
x
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடலிறக்க நோயால் பாதிக்கப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத் தேர்தல் பரப்புரை முடிந்து சிறிது ஓய்வுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள திட்டமிட்டிருந்தார்.அவருக்கு ஹெர்னியா அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் எனக்  மருத்துவ குழுவினர் கூறிய நிலையில், இன்று சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவ குழுவினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு   அறுவைச் சிகிச்சையை தொடங்கியுள்ளனர். அவர் சென்னையில் மூன்று நாட்கள் தங்கி சிகிச்சை பெறுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்