செங்கல் சூளையில் தொழிலாளியின் சடலம் மீட்பு - உறவினர்கள் சாலை மறியல்
சீர்காழி அருகே செங்கல் சூளையில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நிம்மேலி நடுத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் நெப்பத்தூரில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர், 2 வாரத்திற்கு முன்பாக வேலையை விட்டு நிறுத்தப்பட்டுள்ளார். இதனிடையே
செங்கல்லை காயவைக்கும் பகுதியில் சீனிவாசன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஆனால் இவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story