செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் - பேருந்து ஓட்டுநரை மீட்ட காவல்துறையினர்

விருதுநகர் அருகே செல்போன் கோபுரம் மீது ஏறி பேருந்து ஓட்டுநர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல்  - பேருந்து ஓட்டுநரை மீட்ட காவல்துறையினர்
x
திருச்சுழி அருகே மல்லாங்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். தனியார் பேருந்து ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ள நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் கோபித்துக் கொண்டு பிரிந்து சென்ற மனைவி மீண்டும் வீடு திரும்பாததால் ஆறுமுகம் விரக்தியடைந்தார். இதையடுத்து அங்குள்ள செல்போன் கோபுரம் மீது ஏறிய ஆறுமுகம் தற்கொலை மிரட்டல் விடுத்தார். ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் ஆறுமுகத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்