துபாய் விமானத்தில் 6 கிலோ தங்கம் கடத்தல் - இருக்கையின் கீழ் பதுக்கியது கண்டுபிடிப்பு

துபாயில் இருந்து சென்னை வந்த விமான இருக்கையின் அடியில் 2 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாய் விமானத்தில் 6 கிலோ தங்கம் கடத்தல் - இருக்கையின் கீழ் பதுக்கியது கண்டுபிடிப்பு
x
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில், தங்கம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்த நிலையில், சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி சோதனை செய்தனர். அப்போது, ஒரு இருக்கை சற்று தூக்கி கொண்டு இருந்தது. அதில், 2 பார்சல்கள் இருந்தன. சோதனையில், கட்டிகளாக இருந்த 6 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார், அதைக் கடத்தியவர் யார்? என சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்