தமிழகத்தில் மேலும் 9,344 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்தது.
x
தமிழகத்தில் ஏப்ரல் 8ஆம் தேதி, ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்து 276 ஆக இருந்த நிலையில், தற்போது ஒரு நாள் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக 12 வயதுக்குட்பட்ட சிறார்கள் 319 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா மொத்த பாதிப்பு 9 லட்சத்து 80 ஆயிரத்து 728 ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனாவால் ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 071 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு 65 ஆயிரத்து 635 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரு நாளில் 5 ஆயிரத்து 263 பேர் குணமடைந்துள்ளனர். இதனிடையே தமிழகத்தில் 15 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 




Next Story

மேலும் செய்திகள்