அண்ணா பல்கலை தேர்வு முடிவுகளில் குளறுபடி - மறு ஆய்வு செய்ய வைகோ வலியுறுத்தல்

அண்ணா பல்கலை தேர்வு முடிவுகளில் குளறுபடி - மறு ஆய்வு செய்ய வைகோ வலியுறுத்தல்
அண்ணா பல்கலை தேர்வு முடிவுகளில் குளறுபடி - மறு ஆய்வு செய்ய வைகோ வலியுறுத்தல்
x
அண்ணா பல்கலை தேர்வு முடிவுகளில் குளறுபடி - மறு ஆய்வு செய்ய வைகோ வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாகவும், அதனை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழகப் பொறிஇயல் தேர்வு முடிவுகளில் 40 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்தார்,.மேலும் முறைகேடுகளில் ஈடுபட்டதால், இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ள வைகோ, தேர்வில் ஒருமுறை கூடத் தோல்வி அடையாத மாணவர்கள் பலர், மூன்று, நான்கு பாடங்களில் தோல்வி அடைந்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்,. தேர்வு முடிவுகளை உடடினயாக மறு ஆய்வு செய்து, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வு முடிவுகளை கால தாமதம் இன்றி வெளியிட வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்