கடந்த 2 நாட்களில் இரண்டு லட்சத்தி 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை

தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் இரண்டு லட்சத்தி 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2 நாட்களில் இரண்டு லட்சத்தி 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை
x
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் 14ஆம் தேதி முதல் தடுப்பூசி திருவிழா தொடங்கப்பட்டு, 5,000க்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் வீதம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளான 14ஆம் தேதி 73 ஆயிரத்தி 633 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ள சுகாதாரத்துறை, நேற்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாக 2 லட்சத்தி 17 ஆயிரத்தி 666 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் 2 நாட்களில் 2 லட்சத்தி 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளதாகவும், ஒட்டுமொத்த எண்ணிக்கை 43 லட்சத்தை கடந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்