கொரோனா தடுப்பூசி போடும் முகாம் - கிராமங்களில் மருத்துவ குழு தீவிரம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வழுர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவ குழுவினர், வந்தவாசி மேற்கு பாடசாலை, அம்மையபட்டு உள்ளிட்ட கிராமங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முகாமிற்கு வரும் மக்களுக்கு காய்ச்சல் , ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பு ஊசி போடப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் காத்திருந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர்.
Next Story