முக கவசம் அணியாததால் அபராதம் - ஆத்திரமடைந்த வாகன ஓட்டி காவலர் மீது தாக்குதல்

புதுக்கோட்டையில் முககவசம் அணியாத நபருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்டுள்ளார்.
x
புதுக்கோட்டையில் முககவசம் அணியாத நபருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்டுள்ளார்.  புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் சிவக்குமார் முக கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வந்துள்ளார். அப்போது அவ்வழியாக முக கவசம் அணியாமல் 
இருசக்கர வாகனத்தில் வந்த முருகேசனை பிடித்து அவர் அபராதம் விதித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகேசன் சிவகுமாரை தகாத வார்த்தையால் திட்டியதோடு, 
அவரை தாக்கியுள்ளார். உடனடியாக முருகேசனை கைது செய்த சக காவலர்கள், அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்