தொழிலதிபரை தாக்கி ரூ.8 லட்சம் கொள்ளை - வங்கியின் முன் நடந்த வழிப்பறி சம்பவம்

திருப்பூரில் தொழிலதிபரை தாக்கி 8 லட்ச ரூபாய் கொள்ளை நடந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
x
திருப்பூர் மாவட்டம் பல்லடம் குன்னாங்கல்பாளையத்தை சேர்ந்த வெங்கடாச்சலம் அங்குள்ள எஸ்பிஐ வங்கியில் 8 லட்ச ரூபாய் பணம் எடுத்துள்ளார். எடுத்த பணத்தை காரில் வைத்துவிட்டு காரை எடுக்க முயன்ற போது அவரை பின்தொடர்ந்து வந்த ஒருவர் வெங்கடாச்சலத்தின் முதுகில் தாக்கி ஸ்பிரே அடித்துவிட்டு பணத்தை திருடிச் சென்றார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்