கர்ப்பிணி பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம்

சென்னையில் 8 மாத கர்ப்பிணி பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற கொள்ளை கும்பல் அவரை தரதரவென இழுத்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் பார்ப்போரை பதற வைக்கிறது.
கர்ப்பிணி பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம்
x
சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரம், ரேணுகா நகரை சேர்ந்தவர் கீதா, 24 வயதான இவர் எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். சில நாட்களுக்கு முன்பாக இவர் தன் வீட்டுக்கு வெளியே உள்ள கோயிலில் சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கீதாவின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றனர். அப்போது அவர் சுதாரித்துக் கொண்ட போதிலும் கொள்ளை கும்பல் கீதாவை சாலையில் தரதரவென இழுத்துச் சென்றது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

போதை மறுவாழ்வு மையத்தில் பழக்கம் - 6 பேரை கைது செய்த போலீசார்

இந்த சம்பவம் தொடர்பாக பல்லாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்த 22 வயதான தினேஷ்குமார் என்பவரை கைது செய்தனர்.  போதை மறுவாழ்வு மையத்தில் இருந்த போது அங்கிருந்தவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட தினேஷ்குமார், பின்னர் செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ளார். அவர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். இதில் பல்லாவரம் தினேஷை கைது செய்ய சென்ற போலீஸ் ஒருவர் தவறி விழுந்ததில் அவரின் கை முறிந்து சிகிச்சையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்