கொரோனாவால் உயிரிழந்த முதியவர் - அடையாளம் காண, திணறும் அதிகாரிகள்

மதுரை திருமங்கலத்தில், கொரோனா தொற்று பாதித்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
கொரோனாவால் உயிரிழந்த முதியவர் - அடையாளம் காண, திணறும் அதிகாரிகள்
x
மதுரை திருமங்கலத்தில், கொரோனா தொற்று பாதித்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார். திருமங்கலம் பகுதியை சேர்ந்த 65 முதியவர் உடல் நலமின்றி கடந்த 10ஆம் தேதி திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. கடந்த 11ஆம் தேதி மதுரை அரசு மருத்துவமனை கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனிடையே சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, திருமங்கலம் ராம்நகரை சேர்ந்தவர் என அவர் கொடுத்த முகவரியில், அதிகாரிகள் தேடி வருகின்றனர். முகவரிப்படி உரியவர்களை கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்