கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலை மறுஅடக்கம் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தடை

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலை மறுஅடக்கம் செய்ய வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது.
x
சென்னையை சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ், கொரோனாவால் கடந்த ஆண்டு  மரணமடைந்தார். அவரது உடல் கீழ்ப்பாக்கம் கிறிஸ்துவ கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய முயன்றபோது கொரோனாவின் தவறான புரிதலால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மருத்துவர் உடல்  வேலங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது. சைமன் உடலை தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மறு அடக்கம் செய்ய வேண்டும் என அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, மருத்துவர் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மறு அடக்கம் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கொரோனாவால் இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்வது சாத்தியமில்லாதது என சென்னை மாநகராட்சி ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று தனி நீதிபதி உத்தரவுக்கு 2 நீதிபதிகள்  அமர்வு தடை விதித்தது. 

Next Story

மேலும் செய்திகள்