தமிழகத்திற்கான பிரத்யேக வண்ண புத்தகம் - நிப்பான் பெயிண்ட் நிறுவனம் வெளியீடு
பிரபல பெயின்ட் தயாரிப்பு நிறுவனமான நிப்பான் பெயிண்ட், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கான பிரத்யேக வண்ணப் புத்தகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
பிரபல பெயின்ட் தயாரிப்பு நிறுவனமான நிப்பான் பெயிண்ட், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கான பிரத்யேக வண்ணப் புத்தகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பரந்துவிரிந்த காரைக்குடி அரண்மனைகள், நதிகள் , கடல்கள் அலைகள், தமிழ் கலைகளின் துடிப்பான வண்ணங்கள் மற்றும் நமது பண்டிகைகளின் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோல் தமிழில் இருக்கும் அழிவற்ற இலக்கியங்கள், விளையாட்டுகள் மற்றும் நம் வாழ்வின் வளமான வண்ணங்கள் இதில் உள்ளன. பெருமைமிக்க இந்த மண்ணின் பிரத்யேக அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த வண்ணப்புத்தகத்தை வெளியிட்டுள்ளதாக நிப்பான் பெயிண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Next Story